திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் பணிப்பெண் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் காவல்துறை மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும் ஜனவரி 15 ஆம் தேதி அன்று அந்தப் பெண்ணை வேறொரு நபர் ஒருவர் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் கரண்டி உள்ளிட்டைவைகளால் தாக்கிய சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை எதிர்த்து வாதிட்ட சிறுமியின் தரப்பு மூத்த வழக்கறிஞர்பா. மோகன், பணிப் பெண்ணுக்கு மிகவும் கொடூரமாக அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற பிறகு இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணை எதையும் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் பிரதாப், பதில் மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். காவல்துறை தரப்பின் இந்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி இது போன்ற தனி மனித உரிமை சார்ந்த வழக்குகளில் காவல்துறை ஏன் இவ்வளவு மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது? என்றும் காட்டமாக கேட்டார். வரும் வெள்ளிக்கிழமைகள் மனுத்தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினமே பிணை மனு மீது உத்தரவிடப்படும் என்றார்.

About The Author