பட்ஜெட் உரையை புறக்கணித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொல்லியில் ஆய்வை மேற் கொள்ள 5 கோடி ஒதுக்கீடு கீழடியில் திறந்த வெளி தொல்லியில் அருங்காட்சியகம்,
தலைமைச்செயலகம் முதல் அனைத்து துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும், நிதியமைச்சர் கீழடி, சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இந்த பணிகளுக்கு ₹5 கோடி நிதி ஒதுக்கீடு – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு,

1921ஆம் ஆண்டு முதலான சட்டமன்ற ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும். பொது விநியோகத் திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும்

பெரும்பாலான துறைகள் கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்படும்: தமிழக பட்ஜெட்
தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்.

உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.
தொழில்நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும்.

செய்தி : ஜெபஸ்டின்

About The Author