சண்டிகர்: காங்கிரஸ் தலைவரை பயங்கரவாதியின் வீட்டில் பார்க்கவே முடியாது என்றும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதியின் வீட்டில் காணலாம் எனவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.
பஞ்சாபில் வரும் 20ம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக காங்கிரஸ், பா.ஜ., ஆம்ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பர்னாலாவில் நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: என்ன நடந்தாலும், காங்கிரசின் தலைவரை ஒரு பயங்கரவாதியின் வீட்டில் பார்க்கவே முடியாது. துடைப்பம் கட்சியின் (ஆம்ஆத்மி கட்சியின் சின்னம்) மிகப்பெரிய தலைவரை பயங்கரவாதியின் வீட்டில் காணலாம். அதுதான் உண்மை. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.

About The Author