மும்பை: மிக வேகமாக பரவக்கூடிய, உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான் எக்ஸ் இ’ வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, இந்தியாவில் ‛எக்ஸ் இ’ வகை கொரோனா கண்டறியப்படவில்லை என விளக்கமளித்துள்ளது.

நாட்டில், இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக இருந்த கொரோனா வைரஸ் பரவல், தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில், அதிவேகமாக பரவக்கூடிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசான ‛ஒமைக்ரான் எக்ஸ் இ’ வகை பாதிப்பு, முதல் முறையாக மும்பையில் கண்டறியப்பட்டதாக மும்பை பெருநகர மாநகராட்சி நேற்று (ஏப்.,6) தெரிவித்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

About The Author