ஆவடி நகைக்கடை கொள்ளை வழக்கு: சென்னை அழைத்து வரப்பட்ட வடமாநில கொள்ளையர்கள்.
ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை நகைக்கடையில், ஏப்.15ல் ரூ .1.5 கோடி மதிப்புள்ள தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். துப்பாக்கியை காட்டி உரிமையாளரை கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்த நிலையில் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டனர். அசோக், சுரேஷ் ஆகிய இரு குற்றவாளிகளை சென்னைக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்துள்ளனர்.