திருப்பூர் மக்கள் மாமன்ற விழா…

திருப்பூர் மக்கள் மன்றம் அறக்கட்டளை சார்பாக தமிழன்னை திருவறையில் எழுந்தருளும் விழா இன்று 75-ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ் ஆர்வலர்களும் கல்வியாளர்களும் இலக்கிய பொதுநல மற்றும் சமூக சேவை அமைப்புகளும் வணிகர்களும் பொதுமக்கள் பலரும் திரளாக வருகை தந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவின்போது காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரன் பேரமைப்பு மாநில தலைவர் எஸ்.பி. பூமிநாதன் கலந்து கொண்டு, பேசியதாவது திருப்பூர் மாவட்டம் பேருந்து நிலையத்திற்கு திருப்பூர் கொடிகாத்த குமரன் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழக அரசை இதன் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கலைஞன் கலைக்கூடம் நிறுவனர் கே.பி கணேச பாண்டியன் இதை முன்மொழிந்தார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில தலைவர் சிரஞ்சீவி அனீஸ் மற்றும் பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

செய்தி கோவிந்தன் திருப்பூர்.