சென்னை மேயருக்கு பால பாடம் ஆரம்பம்!!

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கூட்டத்தை வழிநடத்துவது குறித்து, அவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், நிர்வாக செயல்பாடுகளுக்கு உறவினர்களை முன்னிறுத்தி, தள்ளியே நிற்கும் பெண் கவுன்சிலர்களுக்கும் பயிற்சி அளிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.முதல்வர் உத்தரவுப்படி, இந்த ஏற்பாடு நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.