பெங்களூரு: ”குஜராத் போன்று, கர்நாடகாவிலும் பாடப்புத்தகத்தில் ‘பகவத் கீதை’ இடம் பெறுவது குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,” என கர்நாடக தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்தார்.

பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது: குஜராத்தில் மூன்று முதல் நான்கு கட்டங்களாக ‘மாரல் சயின்ஸ்’ எனப்படும் அறநெறி பாடத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக பகவத் கீதையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதுதான் என் கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக முதல்வருடன் விவாதித்த பின்னரே, அறநெறி பாடத்தை அறிமுகப்படுத்துவது குறித்து முடிவெடுப்போம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

About The Author