முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தி இன்று தீயணைப்பு துறையில் பல சாதனைகளை செய்துள்ளார். நாம் எல்லோருக்கும் கர்ம வீரர் காமராஜரை தெரியும். தமிழ் மண்ணிற்காக உழைத்த மிக முக்கியமான தலைவர். அவரின் எளிமை பற்றி தெரிந்தவர்கள், அவரை நன்கு அறிந்தவர்களுக்கு எல்லாம் அவரது நண்பர், அவரது அமைச்சரவை அமைச்சர் கக்கன் பற்றியும் நிச்சயம் தெரிந்திருக்கும். இவரது பேத்தியும் இந்த நாட்டிற்காக தற்போது பல பணிகளை செய்து பல சவால்களை எதிர்கொண்ட வீரமங்கையாக திகழ்ந்து வருகிறார். இவர் பெயர் மீனாட்சி விஜயகுமார். இவர் தான் இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு துறை அதிகாரியாவார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

About The Author