சத்தியமங்கலம் – பெங்களூரு நெடுஞ்சாலையில் இரவு போக்குவரத்துக்கு தடை!

வாகனங்கள் மோதி வனவிலங்குகள் பலியாவதை தடுக்க, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்து 2019ல் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை நாளை மறுநாள் முதல் அமல்படுத்த தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் கண்ணன் வேலூர்.