புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 13,154 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நாளை விட 3,959 அதிகமாகும்.

ஒமைக்ரான் இந்தியாவில் மொத்த கோவிட் பாதிப்புகளில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 961 ஆக அதிகரித்துள்ளது. இதில் 320 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக டில்லியில் 263 பேரும், மஹாராஷ்டிராவில் 252 பேரும், குஜராத்தில் 97 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

செய்தி ராகுல் தமிழ் மலர் மின்னிதழ்

About The Author