நாடாளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டம்.

எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பு மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்கள் முறையாக நடத்தப்படாதது குறித்து போராட்டம் நடத்துவார்கள்.

இந்த சம்பவங்களை வருத்தத்தை அளிப்பதாகவும், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் கூறிய பவார், தனது 55 வருட நாராளுமன்ற வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை தான் பார்த்ததில்லை என்றார்.

காங்கிரஸ் (Congress) தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் டெரெக் ஓ பிரையன் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மார்ஷல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், எதிர்க்கட்சி பெண்கள் உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாகவும் கார்கே கூறினார். நாடாளுமன்றத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்றால், இந்த அரசு செயல்படும் விதம் குறித்து கேள்விகள் எழுகின்றன என்றார் அவர்.