விழுப்புரம் அருகே புதிய அணைக்கட்டு விரைவில் திறப்பு: ஆட்சியர் பழனி

விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.82.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அணை விரைவில் திறக்கப்படும் என ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். தென்பெண்ணையாற்றில் ஏனாதிமங்கலம்-கப்பூர் இடையே புதியதாக அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. புதியதாக கட்டப்பட்ட அணைக்கட்டில் மழைநீர் வீணாகதவாரு சேமிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.