ரூ.525 கோடி மோசடி செய்த வழக்கில்

மயிலாப்பூர் நிதி 1 நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்த வழக்கில் அதன் தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டார். அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவர் தேவநாதன். மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக முதலீடு பெற்று வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக புகார் கூறப்படுகிறது.