நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. வழக்கு விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில்,”நீட் தேர்வின் ஒவ்வொரு நடைமுறை செயல்பாடுகளிலும் முறைகேடுகள் உள்ளன. முறைகேடுகள் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளன.வினாத்தாள் கசிவு என்பது அவை வங்கி லாக்கர்களுக்கு அனுப்பப்பட்டதற்கு முன்பே நிகழ்ந்துள்ளது. நீட் முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் முகிஜியா மற்றும் அவருடைய கூட்டாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை,”இவ்வாறு வாதிடப்பட்டது