கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கனமழை பெய்து வருவதன் காரணமாக சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் படகு குழாம் செல்லவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.