சென்னை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது

 சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைத்து ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று ஆளுநர் மாளிகையில் போலீசார் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது.