பத்து வருடத்தில் வெயில் ஒரு மடங்கு அதிகரிக்கும்

இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போ உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்போ நம்மால் தாங்க இயலாது.

குழந்தைகள் காப்பாற்றுவதற்கு சிரமம்

இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடைக் கொப்புளங்கள் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன.

நம்ம வீட்டைச் சுற்றி இடமிருப்பின் முடிந்த அளவிற்கு மரங்களை நடுங்கள்,

மரம் நடுவோம் இயற்கையை காப்போம்

வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்போது தமிழகத்தில் 10 கோடி மர கன்றுகள் நட இப்போதே திட்டமிடுவோம்

மர கன்றுகள் உற்பத்தியாளர்கள்,
வனத்துறை,
பள்ளித் தாளாளர்கள்,
உயர் பதவிகளில் இருப்போர்,
பிரபலங்கள்,
ஆன்மீக தலைவர்கள்,
அனைத்து மதங்களின் குருமார்கள்,
கிராமத் தலைவர்கள்,
ஊர்த் தலைவர்கள்,
அனைத்துக் கட்சித் தலைவர்கள் யாவரும் ஒன்று கூடிச் செயல்படுவோம்.

அதற்கு இப்போதிருந்தே தயார் ஆகிக் கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு குழுவை இப்போதே உருவாக்கிக் கொள்ளுங்கள்

1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டுச் சாதிக்க முடியும். ஒவ்வொரு மரக் கன்றிற்கும் அடுத்த ஒரு வருடம் முடியும் வரை தினமும் 1 லிட்டர் நீர் விட்டால் போதும்.

இதே போல் சில வருடங்கள் செய்தால், 2030 ககுள் தமிழகமும் குளிர்ந்து போகும்

அவரவர் ஊர்களில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் ஆகுங்கள். கிராமங்களில் இன்னும் அதிக மர கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடுங்கள்.

இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் அந்தந்த ஊர்களில், கிராமங்களில் இன்றே துவங்குங்கள்.

மரக் கன்றுகள் நடுங்கள்
அல்லது மரக் கன்றுகள் வாங்கிக் கொடுங்கள் அல்லது மரக் கன்றுகள் நட உதவுங்கள்.

மரக் கன்றுகள் தேவைக்கு உங்களுக்கு அருகில் உள்ள நாற்றுப் பண்ணைகளில், நர்சரிகளில் இப்போதே முன் பதிவு செய்யுங்கள்.

பொது இடங்களில் –
1,புங்கன் மரம்
2,வெப்ப மரம்
3,ஆவி மரம்
4,அரச மரம்
5,குருவி பழம் என்ற சர்க்கரை பழம், லட்டு பழம்
இவைகளை வளர்ந்த கன்றுகளாக பார்த்து வாங்கி நடுவது நன்று. இதில் புங்கன் மரத்தை ஆடு மாடுகள் கடிக்காது

நீர் வழித் தடங்கள் அருகில்
1,பூவரசு மரம்
2,பனை மரம்

பாதுகாப்பு உள்ள வீட்டு அருகில் உள்ள இடங்களில் அவரவர் விருப்ப மரக் கன்றுகள் நடலாம்.
1,கறிவேப்பிலை
2,லட்ச கொட்டை கீரை
3,தேக்கு
4,நாட்டு மா மரம்
5,நாட்டு பலா
6,நாட்டு அத்தி
7,குமிழ்
8,மகா கனி
9,மலை வேம்பு
போன்ற மரங்கள் நடலாம்

வழிபாட்டுத் தலங்கள் –
1,மர மல்லி
2,மகிழம் மரம்
3,மனோரஞ்சிதம்
4,பாரிஜாதம்
5,புன்னை மரம்
6,செண்பக மரம்
7,மருதாணி போன்றவற்றை நடலாம்

2030 இல் பச்சை பசேல் என்ற தமிழகம் உருவாக்குவோம்

இனி வரும் காலங்களில் உண்டாக இருக்கும் கோடை கால கடும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.

மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

மர கன்றுகள் நடுவதற்கு ஆவணி மாதத்தில் முதல் மழை பெய்ததும் 1 நாள் பொது விடுமுறை அறிவிக்க வேண்டுகிறோம்

வெப்ப அலைகளுக்கெதிரான ஒரு போர் போலத்தான் இதுவும்!

ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்…

நன்றே செய்வோம் அதனை இன்றே துவங்குவோம்…

பிடித்திருந்தால் காப்பி செய்து பதிவிட்டு இயற்கையை காக்க உதவுங்கள்…