அனகோண்டா பாம்புகள் பறிமுதல்

பெங்களூரு விமான நிலையத்தில் பயணியிடமிருந்து,10 அனகோண்டா பாம்புகள் பறிமுதல்: ஒருவர் கைது

பெங்களூரு விமான நிலையத்தில் பயணியிடமிருந்து,10 அனகோண்டா பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகள் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தனது செக்-இன் லக்கேஜில் மறைத்து மஞ்சள் அனகோண்டாக்களை கடத்த முயன்றதாக பயணி ஒருவரை கைது செய்தனர். பாங்காக்கில் இருந்து வந்த பயணியின் செக்-இன் பையில் 10 மஞ்சள் அனகோண்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பெங்களூரு விமான நிலையத்தில் பயணியிடமிருந்து,10 அனகோண்டா பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. பேங்க்காக்கிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடமையை ஸ்கேன் செய்த போது, அவரது பையில் ஒரு பொருள் நெலிவதை கண்டனர். உடனடியாக திறந்து பார்த்தபோது, அதில் 10 மஞ்சள் அனகோண்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அதை கடத்தி வந்தவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.