தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும் விவகாரம் மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இத்தகைய சின்னம் எப்படி, யாரால் ஒதுக்கப்படுகிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். தற்போது 2024 மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வேண்டிய சின்னத்தை பெற வேட்பாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

2024 மக்களவைத் தேர்தல் களம் அனலாய் தகித்து கொண்டிருக்கிறது. வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று பரிசீலனை செய்யப்பட்டு, இன்று (மார்ச் 30) மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. மறுபுறம் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் வேட்பாளர்கள் தாங்கள் விரும்பிய அல்லது ஏற்கனவே போட்டியிட்ட சின்னங்கள் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.