புதுச்சேரியில் ஓடும் பேருந்திலிருந்து

புதுச்சேரியில் ஓடும் பேருந்திலிருந்து கல்லூரி மாணவர் இறங்க முயன்ற போது கால் தவறி விழுந்து உயிரிழந்தார். புதுச்சேரி தமிழ்தாய் நகரை சேர்ந்தவர் அபிஷேக். இவர் கல்லூரி முடித்து தனியார் பேருந்தில் வீட்டிற்கு சென்றபோது ஓடிக்கொண்டிருக்கும் பேருந்திலிருந்து இறங்கியபோது அவர் நிலைதடுமாறி பின் சக்கரத்தில் அவரது தலை நசுங்கி அவர் உயிரிழந்தார்.