வீடும் மருத்துவமனையும்…..

எதுவும் விதிப்படியல்ல…!!!

● ருசியோடு ஒரு மருத்துவமனை
உன் வீட்டின் சமயலறை!

● மேற்கத்திய சிகிச்சை முறை
உன் மரணத்தின் தொடக்க உரை…

● நம் இயற்கை மருத்துவ வழி முறை…
அந்த மரணத்திற்கே முடிவுரை!

● கருஞ்சீரகமும்,பெருஞ்சீரகம்
மணக்க மணக்க
நோய் தீர்க்கும் மா மருந்து…

● அது…
புற்று நோயை பூட்டிவைக்கும்
சுகாதார பூ விருந்து!

● மஞ்சள் என்னும்
கிருமி நாசினியின் மகத்துவம்
தெரியுமோ?

● வேனல் நீக்கும்
வெந்தயத்தைத்தான் உனக்கு
புரியுமோ?

● நடமாடும்
மருத்துவ சாலை உன் வீடு..

● உன் வாழ்வு வண்டி
அதில் பயணிக்க அனுமதி கூறு!

● உன் தலையணையின்
அடியிலிருக்கும் சுகாதாரமே
உன் வீட்டு அஞ்சறைப்பெட்டி…

● ஆனாலும் நீ,
நோயை இருத்திக்கொண்டு
பாய் போல் படுத்துக்கிடக்கிறாய்
சோம்பலைக் கொட்டி!

● இனியேனும் அருகிலிருக்கும்
சமையல் கூடத்தின்
நிவாரணம் உணர்…

● ஆங்கில மருந்தென்பது
உன்னை ஏமாற்றித்தொலைக்கும்
தற்காலிகத் திமிர்!

● உன் நெஞ்சுச் சளியை தீர்க்கும்
இஞ்சி, மிளகு பற்றிதான் நீ
அறிந்திருக்கிறாயா?

● இரத்தத்தை சுத்திகரித்து
இதயத்தை பலப்படுத்தும்
வெங்காய வேகத்தைத்தான்
நீ உணர்ந்திருக்கிறாயா?

● பச்சை மிளகாயின் பலம் தெரியுமா?
அதன் பலன்தான் உனக்கு புரியுமா?

● ஆங்கில மருத்துவர்கள் உன்னை
அடி மடையனாக்கி பிழைக்கும்
வியாபாரத் தந்திரத்தை யோசி…

● பொது புத்தி கொண்ட அவன்,
தேகம் மெலிந்த உன்னவர்களிடம்
ஆப்பிள் அற்புத சத்தன்றே
சாதித்து விட்டான் பேசி…

● ஒரு வாழைப் பழத்திற்கு
நான்கு ஆப்பிளே சமம் என்பதை
மட்டும் மறுத்து விட்டான்…
கூகுலில் தேடி வாசி!

● உன் சக்கரை நோய்க்கு ஒட்டுமொத்த
பழங்களிலும் மருந்துண்டு என்பதை
ஏனோ? மறைத்து விட்டான்…

● உடற்கேட்டை உண்டாக்கும்
மைதாவையும், கோதுமையையும்
நல்லதெனச் சொல்லி பொய்யையும்
அவிழ்த்து விட்டான்…

● நல்ல அரிசி,பலகாரங்களுக்குள்தானே
இனிப்பு நோயையும் புதைத்து விட்டான்…

● அரிசி உணவென்பது நம் ஆயுளை
கூட்டிப் பெருக்கி நோயைக் கழிக்கும்
கணக்கு வாத்தியார் என்பதையோ
ஒளித்து விட்டான்!

● தானாக விளைந்ததெல்லாம் மருந்துகள்
உனக்காகவிளைத்ததெல்லாம்விசங்கள்!

● பப்பாளியின் மருத்துவ குணத்துக்கு
ஒப்பாக ஒன்று சொல் பார்ப்போம்?

● வெள்ளைச் சக்கரையின்
வெளிச்ச வேதனையை புரியாது இருட்டுக்குள் வைத்தே
புசித்துக் கொண்டிருக்கிறாய்…

● நாட்டுச்சக்கரையின் நலன்
தெரியாது!

● ஆங்கில வலி மருந்து உன்
சிறு நீரகத்தை கொத்தியொழிக்கும்
கரு நாகப் பருந்து என்பதை உணர்!

● அயோடின் உப்பு மருத்துவர்களின்
வாயை பூட்டிப்போட்ட அயோக்கியத்
தப்பு தெரியுமோ?

● மேற்கத்தி அரக்கன் தன் மருந்தை விற்க
மடையனாக்கிவிட்டான் உன்னை…

விழித்துக்கொள் நண்பா…
எல்லாம் விதிப்படியல்ல, அனைத்தும்
ஆங்கில நயவஞ்சகத்தின் சதிப்படி!

நன்றி லயன் வெங்கடேசன் செங்கல்பட்டு மாவட்டம்.