26ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம்..

தமிழக முதல்வரும்,மக்கள் திலகம் எம்ஜிஆரின் மனைவியும்,சிறிது காலம் தமிழகத்தின் முதல்வர் அரியணையில் அமர்ந்தவருமான திருமதி வி.என். ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும் (19.05.2022)…!

வைக்கம் நாராயணி ஜானகி செப்டம்பர் 23, 1924 இல் பிறந்தார். மே 19, 1996 இல் அமரரானார்.  வி.என்.ஜானகி ராமச்சந்திரன் என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை , முன்னாள் தமிழ்நாடு முதல்வர் பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய 
மருதூர். கோபால மேனன் ராமச்சந்திரனுக்கு
 (எம்ஜியார்)மூன்றாவது மனைவியாவார்.
இவரின் பெற்றோர் ராஜகோபால் ஐயர்
நாராயணம்மாள் ஆவர்.வைக்கம் நாராயணி ஜானகி கேரள மாநிலம் திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட வைக்கம் என்னும் ஊரில் வாழ்ந்த நாயர் குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மாவிற்கு 1924 செப்டம்பர் 23ஆம் நாள் பிறந்தார்.இவருக்கு மணி என்ற நாராயணன் என்னும் தம்பி இருந்தார்.முன்னோர்களின் சூதாட்டம் கேளிக்கைகளால் சொத்தை இழந்து வறுமைக்கு ஆளானது ஜானகியின் குடும்பம். எனவே ஜானகி தனது 12ஆவது வயதில், 1936 ஆம் ஆண்டில், தன் தாயாருடன் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார்.அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் (Little Flower High School) சேர்ந்து பயின்றார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் கவிஞர் பாபநாசம் சிவனின் தம்பியான ராஜகோபால ஐயர் ஆவார். சிறிது காலத்திற்குள்ளவாகவே ஜானகிக்கு அம்மாவான நாராயணியம்மாள் இந்த ராஜகோபால ஐயருக்கு துணைவி ஆனார். 1936ஆம் ஆண்டில் வெளிவந்த
மெட்ராஸ் மெயில்  திரைப்படத்தில் பாடல்கள் எழுத ராஜகோபால ஐயருக்கு வாய்ப்புக் கிடைத்தது. எனவே அவர் தன்
குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறினார். அதனால் ஜானகியும் 
சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.ஜானகி சென்னைக்கு வந்த பின்னர் திரைப்படங்களில் நடிக்க விரும்பினார். ஆனால் நாராயணி அம்மாளுக்கு அதில் விருப்பம் இல்லை. இருப்பினும் ராஜகோபாலய்யரின் ஊக்குவிப்பால் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவர் நடித்த படங்கள் சில:
இன்பசாகரன்
மன்மத விஜயம்
கிருஷ்ணன் தூது
கச்ச தேவயானி
சாவித்திரி
அனந்த சயனம்
கங்காவதார்
தேவ கன்யா
ராஜா பர்த்ருஹரி
சாம்ரட்சனம்
பங்கஜவல்லி வேடம்
சகடயோகம்
சித்ர பகாவலி
தியாகிசிறு
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
சந்திர லேகா
ராஜ முக்தி (எம்ஜியாருடன் அறிமுகம்)
மோகினிம.(எம்ஜியாருடன் நடித்த இரண்டாவது படம்)
லைலா மஜ்னு
வேலைக்காரி
மருதநாட்டு இளவரசி
தேவகி…போன்றன.

அனந்த சயனம் திரைப்படத்தை இயக்கிய 
கே.சுப்பிரமணியம் நடன கலா சேவா என்னும் நாட்டியக் குழுவை அமைத்திருந்தார். ஜானகி இக்குழுவில் 1942-ஆம் ஆண்டில் இணைந்தார். இக்குழுவில்
கே. சுப்பிரமணியத்தின் மனைவியும் நடிகையுமான எஸ். டி. சுப்புலெட்சுமிக்கு 
அடுத்த நிலையில் இருந்தார். அவரோடு இணைந்து இந்தியா முழுவதும் பயணம் செய்து இவர்கள் நாட்டிய நாடகங்களை நடத்தினர். வள்ளி திருமணம் நாடகத்தில் ஜான்கி முருகனாகவும் சுப்புலெட்சுமி வள்ளியாகவும் நடித்தனர்.ஜானகி திரையுலகில் நுழைந்த சில காலத்திற்குள் நடிகரும் ஒப்பனையாளருமான கண்பதிபட் என்னும் கன்னடமொழிக்காரருக்கு அறிமுகம் ஆனார். அவ்வறிமுகம் காதலாக மாறி, திருமணமாக முடிந்தது இவர்களுக்கு அப்பு என்கிற சுரேந்திரன் என்னும் ஆண்குழந்தை பிறந்தது.
ஜானகி “ராஜ முக்தி% படத்தில் கதாநாயகியாக நடித்தபொழுது, இரண்டாவது கதாநாயகனாக எம்ஜியார் நடித்தார்.எம்ஜியாரின்  முதலாவது மனைவியான பார்கவி என்னும் தங்கமணியின் சாயலின் ஜானகி இருந்ததால், எம்ஜியாருக்கு இவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950-ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் ஜானகியும் எம்ஜியாரும் காதலிக்கத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் எம்ஜியாராால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கண்பதிபட்டின் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது சென்னை  லொயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த எம்ஜியாரின்  வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். எம்ஜியார் அவரை தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் எம்ஜியாரும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை எம்ஜியார  தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.இத்திருமணத்தை எம்ஜியாரின் அண்ணனும் நடிகருமான   சக்ரபாணியும் குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர்.
எம்ஜியாரின்  இரண்டாம் மனைவி சதானந்தவதி உடல்நலமில்லாமல் இருந்ததால் அவரை இவர்கள் இருவரும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டனர்.  ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் 1962 ஜூன் 14ஆம் நாள் எம்ஜியாரும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தை பதிவு செய்துகொண்டனர். இருவரும் லொயிட்ஸ் சாலை வீட்டிலிருந்து கிளம்பி ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.
ஜானகிக்கு அப்பு என்கிற சுரேந்திரனைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை. எனவே தன் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா, கீதா, சுதா. ஜானு, தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார்.
ஜானகி தன் கணவரான எம்ஜியார்  மும்முரமாக அரசியலில் ஈடுபட்டிருந்த காலங்களில் அதன் நிழல் கூட தன்மீது படாத அளவிற்கு விலகி இருந்தார். எம்ஜியார் 1984 ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்ட பின்னர் அவருக்குத் துணையாக அவரோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். எம்ஜியார் 1987 டிசம்பர் 24 ஆம் நாள் மரணமடைந்த பின்னர் 1988 
ஜனவரி 2 இல் அதிமுகவின் இரண்டாம் தலைவராகவும்,ஜனவரி 7ம் திகதி தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராகவும் ஆனார் வி.என்.ஜானகி.  ஆனால் சட்டமன்றத்தில் தனது தலைமை மீதான தனது கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இயலாததால் 1988 ஜனவரி 30 ஆம் திகதி  ஆட்சிப்பொறுப்பை இழந்தார்.எம்ஜியாரின் மறைவுக்குப்  பின்னர் அவரைத் தலைவராகவும்,பொதுச்செயலாளராகவும் கொண்டு இயங்கிய அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது.ஜானகி தன் பிரிவிற்கு தலைவராகவும், செயலலிதா தன் பிரிவிற்கு பொதுச்செயலாளராகவும் 1989 
ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்டிபட்டித் தொகுதியில் ஜானகி போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அ. இ. அ. தி. மு. க. இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டதால் தமிழகத்தை ஆளும் வாய்ப்பை இழந்தது. எனவே அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெருமுயற்சி செய்து ஜானகி,ஜெயலலிதா தலைமையிலான அணிகளை இணைத்தனர். அதிமுகவில் தலைவர் பதவி நீக்கப்பட்டது.ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார்.ஜானகி அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகினார்.
ஜானகி அரசியலில் இருந்து விலகி எம்ஜியாரின் ராமாவரம் தோட்டத்தில் தன் மகனோடும் வளர்ப்புப் பிள்ளைகளோடும் வாழ்ந்தார்.எம்ஜியார் உருவாக்கிய காதுகேளாதோர் பள்ளியின் நிர்வாகத்தினைக் கவனித்தபடி, தனது இறுதிக் காலத்தைக் கழித்த ஜானகி அம்மையார், கடந்த 1996 மே மாதம் 19ஆம் தேதி தனது  73வது வயதில் அமரரானார்.

ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை .