எங்களுக்கும் பெரிய இழப்பு; ரஷ்யா ஒப்புதல்!!

மாஸ்கோ: உக்ரைன் மீதான போரால் தங்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு 40 நாட்களுக்கும் மேலாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆயுத பலத்தை பொறுத்தவரை ரஷ்யா பெரிய நாடாக இருந்தாலும், அந்நாட்டின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவது, ரஷ்ய படை வீரர்களை எதிர்த்து தாக்குதல் நடத்துவது என உக்ரைன், ரஷ்யாவை எதிர்த்து திறம்பட போரிட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த வாரம் ரஷ்ய எல்லையில் இருக்கும் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.