மின்துறை சீர்திருத்த பணிகள்; தமிழகத்திற்கு ரூ.7,054 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு!!

புதுடில்லி: மின்சாரத்துறை சீர்திருத்த பணிகளுக்காக தமிழகம் உட்பட 10 மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் மின்சாரத்துறை சீரமைப்புக்காக தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம், அசாம், ஒடிசா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு மட்டும் ரூ.7,054 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.