ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி., சட்டத் திருத்த பணிகள் துவக்கம்: சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ!!

புதுடில்லி: விரைவான நீதியை வழங்கவும், மக்களை மையமாகக் கொண்ட சட்ட அமைப்பை உருவாக்கவும் இந்திய குற்றவியல் சட்டங்களில் விரிவான மாற்றங்களைச் செய்யும் பணியினை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ அளித்த எழுதுப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது: நாட்டின் குற்றவியல் சட்டங்களில் சீர்திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக மார்ச் 2, 2020 அன்று டில்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழு மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டது. இக்குழு நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சி மூலம் கிடைத்த தகவல்களை கேள்விகளாக கேட்டு ஆலோசனைகளை பெற்றது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.