நின்றிருந்த லாரி மீது கார் மோதல்; 2 பேர் பலி!!

பாலக்காடு: கேரள மாநிலம் வாளையாற்றில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆர்.டி ஒ., சோதனைச் சாவடி அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூரைச் சேர்ந்தவர் பாலாஜி, முருகேசன், மொய்தீன், மொய்னுதீன் ஆகிய 4 பேர் வெளிநாடு செல்லும் நண்பரை கொச்சி விமான நிலையம் சென்று காரில் திரும்பினர். அப்போது அதிகாலை 4:30 மணியளவில் வாளையாற்றின் ஆர்.டி.ஓ., சோதனைச் சாவடி அருகே நின்றுக்கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில், பாலாஜி, முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மொய்தீன் என்பவர் காயமடைந்துள்ளனர். காரை ஓட்டிய மொய்னுதீன் என்பவர் காயமின்றி தப்பினார். வாகன ஓட்டி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.