உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைத்ததா ரஷ்யா?!!

வாஷிங்டன் : ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதி பேச்சில் ஈடுபட்ட ரஷ்ய தொழிலதிபர் மற்றும் உக்ரைன் குழுவை சேர்ந்த இருவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில், இரு நாட்டு பிரதிநிதிகள் குழு இடையே அமைதி பேச்சு நடந்து வருகிறது. பல்வேறு சுற்று பேச்சில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.உக்ரைன் அரசின் வேண்டுகோளை ஏற்று, ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிக் இந்த அமைதிப் பேச்சில் பங்கேற்று உக்ரைனுக்கு ஆதரவாக பேசி வந்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.