ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0: டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவு!!

சென்னை: ‘ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில், மேலும் ஒரு மாதம் அதிரடி நடவடிக்கையை தொடர வேண்டும்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:க டந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த நடவடிக்கையை, இன்றில் இருந்து ஏப்., 27 வரை, ‘ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற பெயரில் தொடர வேண்டும். பள்ளி, கல்லுாரி அருகே, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை ஒழிக்க வேண்டும். கடத்தல், பதுக்கல், விற்பனை சங்கிலி தொடரை உடைக்க வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.