2 நாள் வேலைநிறுத்தத்துக்கு திராவிடர் கழகம் ஆதரவு – கி.வீரமணி அறிவிப்பு!!

அகில இந்திய தொழிற்சங்கங்கள் இன்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு திராவிடர் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

லாபம் ஈட்டும் எல்.ஐ.சி. போன்ற அரசு துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பினை எதிர்ப்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 28-ந் தேதி (இன்று), 29-ந் தேதி (நாளை) ஆகிய நாட்களில் நடைபெறும், அகில இந்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்துக்கு திராவிடர் கழகம் தன்னுடைய ஆதரவினை தெரிவித்துக்கொள்கிறது. திராவிடர் கழக தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் இதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.