60 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்!!

சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, பிப்., 19ல் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வாயிலாக, மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், 4ம் தேதி தேர்வு செய்யப்பட்டனர். கவுன்சிலர்கள் கடத்தல், சட்டம், ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 60 இடங்களில், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை.

இதையடுத்து, தள்ளி வைக்கப்பட்ட இடங்களில், இன்று மறைமுக தேர்தல் நடத்தப்படும் என, மாநில தேர்தல் கமிஷன், ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி, ‘சிசிடிவி’ கண்காணிப்பு மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மறைமுக தேர்தல் இன்று நடக்க உள்ளது. நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்வதற்கு காலை 9:30 மணிக்கும், துணைத் தலைவர்களுக்கான தேர்தல், பிற்பகல் 2:30 மணிக்கும் நடக்க உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.