1,480 மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு!

சென்னை : நடப்பு கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வகுப்பிலும், 10 பேர் வீதம், மாவட்டத்துக்கு, 40 மாணவர்கள்; மாநிலம் முழுதும், 1,480 மாணவ, மாணவியரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தலா, 2,000 ரூபாய் வீதம் பரிசு வழங்க, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, 29.60 லட்சம் ரூபாய் நிதி, பள்ளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.