ஏற்றுமதியில் இந்தியா சாதனை: பிரதமர் பாராட்டு!!

புதுடில்லி: இதுவரை இல்லாத அளவாக, 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை: 400 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை முதன்முறையாக எட்டியுள்ளது. இந்த சாதனைக்காக விவசாயிகள், நெசவாளர்கள், சிறு, குறு தொழில் செய்வோர், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். நமது தன்னிறைவு இந்தியா பயணத்தில் இது முக்கிய சாதனையாகும். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.