தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!!

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே வரபிரசாத் நகரில் குடியிருப்பு பகுதிக்குள் திடீரென முதலை ஒன்று புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். கொளப்பாக்கம் ஏரி அருகே உள்ள பகுதி என்பதால் முதலை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. முதலையை வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினர் பிடித்தனர்.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.