பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர்..!!!

பூண்டியில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்களுடன் படியில் தொங்கியபடி சட்டமன்ற உறுப்பினர் பயணம் செய்தார். பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனிடம் காலை மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் செல்லும் போது கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். போதிய பேருந்து  இல்லாததால் மாணவர்கள் படியில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்வதாகவும் கோரிக்கை விடுத்தனர். அப்போது  பூண்டிலிருந்து புறப்பட வேண்டிய பேருந்து வந்து நின்றதால் மாணவர்கள் முண்டியடித்து ஏறினார்கள்.  அப்போது மாணவர்கள் பயணம் செய்த பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையம் வரை படியில் பயணம் செய்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி