திருச்செந்தூர் கோயில் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தம்!!!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தங்கத்தேர் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இக் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு தினமும் நடக்கும். தேரின் மேல் பகுதி குடை மற்றும் குதிரைகள் பழுதுபட்டிருப்பதால் அவற்றை சீர் செய்த பிறகு தங்கத் தேர் புறப்பாடு மேற்கொள்ளப்படும், என கோயில் இணை ஆணையர் குமரதுரை தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி