பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்சோவில் கைது!!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமம் பகுதியை சேர்ந்தவர் ஆதிமுத்து செல்வன் (வயது 43). இவர் கொட்டகுடி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியின் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளதாக கூறப்படுகின்றது. பின்னர், அந்த மாணவியிடம் இது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். கழுதி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை