மின்சாரம் பாய்ந்தவரை காப்பாற்ற வந்தவர் பலி!!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று (மார்ச் 9) சரண்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற ஏழுமலை, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தின்போது, சரண்ராஜை காப்பாற்ற முயன்ற ரேணுகோபால் என்பவரும் உயிரிழந்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.