டெண்டர் முறைகேடு விசாரணையை எதிர்த்த எஸ்.பி. வேலுமணி வழக்கில் காவல்துறைக்கு நோட்டீஸ்..!!

டெண்டர் முறைகேடு விசாரணையை எதிர்த்த எஸ்.பி. வேலுமணி வழக்கில் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தது. டெண்டர் முறைகேடு வழக்கு புலன் விசாரணையை 10 வாரங்களில் முடிக்க ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மேல்முறையீடு செய்திருந்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கீதா.