ராஜபக்சே தம்பியை விமர்சித்த 2 மந்திரிகள் அதிரடி நீக்கம்

பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை நிதி மந்திரியும், பிரதமர் மகேந்திர ராஜபக்சே தம்பியுமான பசில் ராஜபக்சேதான் காரணம் என அந்நாட்டு மின்துறை மந்திரி, தொழில்துறை மந்திரி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் தீவு நாடான இலங்கை சுற்றுலாப்பயணிகளை நம்பியே உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவல் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கை குறைந் துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வராததால் அந்த நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. குறிப்பாக கச்சா எண்ணை, உரங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான அன்னிய செலாவணி இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.