கடலில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் அலையில் சிக்கி பலி!!!

சென்னை மெரினா கடலில் குளித்து கொண்டிருந்த இரு பள்ளி மாணவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். கடலில் குளித்துக்கொண்டிருந்த 9 மாணவர்களில் இருவர், கடல் அலையில் சிக்கி காணாமல் போயினர். இதனால் அதிர்ச்சியடைந்த  சக மாணவர்கள் இது குறித்து மெரினா போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் மீட்பு படையினர், அலையில் அடித்து செல்லப்பட்ட இரு மாணவர்களை கடலில் இறங்கி தீவிரமாக தேடினர். சில மணி நேரத்திற்கு பிறகு உயிரிழந்த நிலையில் இரு மாணவர்களின் உடலும் கரை ஒதுங்கியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.