உ.பி. தேர்தல்: யோகி ஆதித்யநாத் தொகுதி உள்பட 57 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு..!

உத்தரபிரதேச சட்டசபையின் 6-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது.

உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 5 கட்ட தேர்தல் முடிந்தநிலையில், நாளை (வியாழக்கிழமை) 6-வது கட்ட தேர்தல் நடக்கிறது.
10 மாவட்டங்களில் அடங்கிய 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. அந்த தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் இத்தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கீதா.