மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு ஒன்றிய அமைச்சர்களை அனுப்ப முடிவு

மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு ஒன்றிய அமைச்சர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர்கள் அமித்ஷா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பங்கேற்றுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.