சினிமா பாணியில் பஸ் கண்டக்டர் பர்ஸ் பிக்பாக்கெட்!!!

திருப்பூரில் திரைப்பட பாணியில் அரசு பேருந்து நடத்துனரின் பணப்பை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நம்பியூருக்கு தடம் எண் 26A என்ற அரசு நகரப்பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து புஷ்பா சந்திப்பை கடந்தபோது நடத்துனர் ரங்கசாமி தனது பாக்கெட்டில் இருந்த பர்ஸ் திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் பேருந்து ஓட்டுனரிடம் தகவலை கூறியதை அடுத்து பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டது.பர்ஸில் நடத்துனர் அடையாளர் அட்டை, ஏடிஎம் கார் மற்றும் 300 ரூபாய் பணம் உள்ளதாகவும், பணத்தை வேண்டுமானால் எடுத்துக்கொண்டு பர்ஸை பேருந்தில் போட்டுவிடுமாறு விரக்தியுடன் கூறினார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.