கோவை மேம்பால பணியின் போது விபத்து – பணியாளர் மரணம்!!!

கோவை உக்கடம் பகுதியில் மேம்பால பணிக்காக மரத்தை அகற்ற முயன்ற போது தூய்மை பணியாளர் சுரேஷ் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுரேஷை கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.