இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் நேற்றுமுன்தினம் மாலை கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்றுமுன்தினம் இரவு 13 மீனவர்கள், தமிழக பகுதியான கோடியக்கரைக்கு தென்கிழக்கே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை ரோந்து கப்பல் காரைக்கால் மற்றும் நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்ததோடு, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 13 மீனவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களது விசைப்படகை பறிமுதல் செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.