புத்தாக்கம் தரும் ரீயூசபல் புத்தகங்களா???

காலத்திற்கு ஏற்ப குழந்தைகள் கல்வி பயிலும் முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. சிலேட்டு,  பல்பம் என இருந்த நிலை மாறி, தற்போது பலமுறை எழுதக்கூடிய ’ரீயுசபல் புத்தகங்கள்’ வந்து விட்டன. கொரானா காலகட்டத்தில் மழலைகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதால், கல்வித் திறன் குறைந்து வருவதாக பெற்றோர்கள் கவலையில் உள்ளனர். அவர்களது கவலைகளைத் தீர்க்கும் வகையில், படங்களுக்கும் வார்த்தைகளுக்கும் ஏற்ப எழுத்துக்களை எழுதி, குழந்தைகள் கல்வி கற்கும் வகையிலான பல முறை பயன்படுத்தும் ரியூசபல் புத்தகங்கள், 45வது சென்னை புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.