நிலையான பொருளாதார மீட்சியே மத்திய அரசின் விருப்பம்: நிர்மலா சீதாராமன்…

மும்பையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தொழில்துறையினருடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய உரையாடலில் ஈடுபட்டார்.  அப்போது பேசிய அவர், “கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டிருக்கும்போது இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நிலையான பொருளாதார மீட்சியையே மத்திய அரசு விரும்புகிறது. பொருளாதார மீட்சிக்கான அம்சங்கள், பட்ஜெட்டில் நிறைய உள்ளன. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவினங்கள், பொருளாதாரத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.