தூத்துக்குடி அருகே ரூ.30 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்..!

தூத்துக்குடி அருகே வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீசார், கடத்த முயன்ற 8 பேரை கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி கியூ பிரான்ச் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார் அங்கு படகில் இருந்தவர்களை சோதனை செய்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.