நான் உலகின் இனிமையான பயங்கரவாதி – அரவிந்த் கெஜ்ரிவால்

ரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்-மந்திரியாக காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் ஆதரவை பெறவும் தயாராக உள்ளார் எனவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டிற்கு ஆம் ஆத்மி கட்சியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவர் பேசுகையில், 100 ஆண்டுகளுக்கு முன் பகத்சிங்கை பிரிட்டிஷார் பயங்கரவாதி என்று கூறினர். நான் பகத்சிங்கின் தீவிர ஆதரவாளன். வரலாறு இன்று மீண்டும் திரும்புகிறது. தற்போது ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து பகத்சிங்கின் சீடனை (கெஜ்ரிவால்) பயங்கரவாதி என்கின்றனர். நான் உலகின் இனிமையான பயங்கராவாதி நானாகத்தான் இருப்பேன். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.